யானை தாக்கியதில் பெண் பலி

பெ.நா.பாளையம் கோவை வனச் சரகத்துக்கு உள்பட்ட ஆனைகட்டி அருகே யானை தாக்கியதில் பெண் புதன்கிழமை உயிரிழந்தனர். 


பெ.நா.பாளையம் கோவை வனச் சரகத்துக்கு உள்பட்ட ஆனைகட்டி அருகே யானை தாக்கியதில் பெண் புதன்கிழமை உயிரிழந்தனர். 

கோவை மாவட்டம், ஆனைகட்டி, ஆலமரமேடு அருகே உள்ள கொண்டனூர்புதூரைச் சேர்ந்தவர் பொன்னம்மாள் (82). இவர் கொண்டனூர் வனக் குழுத் தலைவர் ரவியின் பாட்டி ஆவார். 

இந்நிலையில், தனது தோட்டத்தில் இருந்து வீட்டுக்கு பொன்னம்மாள் புதன்கிழமை காலை 6 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக கூட்டமாக வந்த காட்டு யானைகளில் ஒன்று பொன்னம்மாளை தும்பிக்கையால் தூக்கியபடி நடந்து சென்று கொண்டிருந்தது.

இதனைப் பார்த்த அங்கிருந்த பெண் ஒருவர் கூச்சலிட்டதால் மிரண்டு போன யானை, பொன்னம்மாளை கீழே போட்டு மிதித்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். 

இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மூதாட்டியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

இதுகுறித்து தடாகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com