பாஜகவுடன் பேச மு.க.ஸ்டாலின் முயற்சித்து வருவது உண்மைதான் என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
தூத்துக்குடியில் தாமரைதான் மலரும். தண்ணீரில் தாமரை உள்ளதால் தாகம் இல்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜகவுடனும் பேசிக் கொண்டிருக்கிறார் என்ற ஜெயக்குமார் கூறிய தகவல் உண்மைதான்.
ஒரு பக்கம் ராகுல், மறுபக்கம் சந்திரசேகர ராவ், மூன்றாவதாக மோடியுடனும் திமுக பேசிக் கொண்டிருக்கிறது. பாஜகவுடன் ஒருவர் மூலமாக திமுக தரப்பு பேசிக் கொணடிருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிறம் மாறிக்கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.