Enable Javscript for better performance
சிறையில் கைதிகளுக்கு யோகா பயிற்சி  : உயர்நீதிமன்றம் அனுமதி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    சிறையில் கைதிகளுக்கு யோகா பயிற்சி  : உயர்நீதிமன்றம் அனுமதி

    By DIN  |   Published On : 15th May 2019 02:52 AM  |   Last Updated : 15th May 2019 02:52 AM  |  அ+அ அ-  |  

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கைதிகளின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் யோகா பயிறசி வழங்க சேலம் சிறையில் உள்ள ஆயுள்தண்டனை கைதிக்கு அனுமதியளித்து  உத்தரவிட்டுள்ளது. 
    தருமபுரி மாவட்டம், இரணியன் அல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். கடந்த 1998-ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, செந்தில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள செந்திலை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி அவரது தாய் அமுதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. எனது மகன் 14 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். மேலும் சிறை கைதிகளுக்கு கடந்த 8 ஆண்டுகளாக யோகா பயிற்சி அளித்து வருகிறார். எனவே, அவரது நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை, சிறை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்கும் குழுவுக்கு 6 வார காலத்துக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என சேலம் சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டிருந்தது. 
    இந்த உத்தரவை சிறை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அமுதா நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் அப்துல்குத்தூஸ் ஆகியோர் கொண்ட அமர்வில்  அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளதால், மனுதாரரின் மகன் சிறை கைதிகளுக்கு யோகா பயிற்சி அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மனுதாரரின் மகன் சிறை கைதிகள் தங்களது மன அழுத்தங்களிலிருந்து வெளிவரவே யோகா பயிற்சியை அளித்து வருகிறார். இதனை தடுப்பதால் சிறை கைதிகளுக்கும், சிறை அதிகாரிகளுக்கும் தான் இழப்பு. எனவே, அவர் கைதிகளுக்கு யோகா பயிற்சி அளிக்க அனுமதிக்க வேண்டும். ஒருவேளை பயிற்சி வழங்க அனுமதி மறுத்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் எனக்கூறி விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தனர். 
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp