கோடை மழை காரணமாக நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சீகூர் அருவியில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்தின் மிக வறண்ட பகுதியான கர்நாடக வன எல்லையில் உள்ள சீகூர் வனச் சரகக் காடுகள் கோடை மழையால் பசுமைக்கு திரும்பியுள்ளன. கர்நாடக மாநிலத்தின் வறட்சியின் தாக்கம் அப்பகுதியில் உள்ளதால் எப்போதுமே வறண்டே காணப்படும்.பெரும்பாலான வறண்ட தாவரங்களும் அப்பகுதியில் காணப்படும்.
இந்த ஆண்டு கோடை மழை பரவலாக பெய்துள்ளதால் சீகூர் வனப்பகுதி பசுமைக்கு திரும்பியுள்ளது. இங்கு மிக உயரமான இடத்தில் உள்ள அருவியிலும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிக்குச் சென்று வர சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.