தமிழ் தெரியாத ரயில்வே பணியாளர்கள்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் ரயில்வேத் துறையில்  நிலைய அலுவலர், ரயில் ஓட்டுநர்கள், பாதுகாவலர் உள்ளிட்ட பணிகளுக்கு  தமிழ் தெரியாதவர்களை
தமிழ் தெரியாத ரயில்வே பணியாளர்கள்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் பதிலளிக்க உத்தரவு


தமிழகத்தில் ரயில்வேத் துறையில்  நிலைய அலுவலர், ரயில் ஓட்டுநர்கள், பாதுகாவலர் உள்ளிட்ட பணிகளுக்கு  தமிழ் தெரியாதவர்களை பணியமர்த்த தடைகோரிய வழக்கில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது. 
மதுரையைச் சேர்ந்த மணவாளன் தாக்கல் செய்த மனு: 
மதுரை கள்ளிக்குடி- திருமங்கலம் ரயில்வே பாதையில் மே 8 -ஆம் தேதி ஏற்பட இருந்த விபத்து கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது. இந்த நிகழ்வு ரயில்வே நிர்வாகம் சில மாறுதல்களை கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக உள்ளது. தமிழகத்தில் பணியாற்றும் 15 முதல் 20 சதவீத ரயில்வே ஊழியர்கள் தமிழ் மொழி தெரியாதவர்களாகவே உள்ளனர். ரயில்வே தேர்வுகள் ஆங்கிலம் அல்லது இந்தியில் நடத்தப்படுவதால் தமிழ் மாணவர்கள் உள்பட அந்தந்த மண்டல மொழி பேசும் மாணவர்கள் ரயில்வே தேர்வுகளில் பெருமளவில் தேர்ச்சி பெறுவதில்லை. தமிழகத்தில் ரயில்வேத் துறையில் நிலைய அலுவலர், ரயில் ஓட்டுநர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பணிகளில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் தமிழ் மொழி தெரிவதில்லை. திருச்சி மண்டலத்தில் 2,145 பாதுகாவலர்களில் பெரும்பாலானவர்களுக்கு தமிழ் தெரிவதில்லை. இதுவே கள்ளிக்குடி- திருமங்கலம் ரயில்வே பாதையில்  நடக்க இருந்த விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.  எனவே ரயில்வே துறைக்கு தமிழகத்தில் தமிழ் தெரியாதவர்களை பணியமர்த்த தடைவிதிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எம்.தண்டபாணி ஆகியோர் கொண்ட அமர்வில்  புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு குறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 6 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com