விஷ விதைகளை விதைத்து குளிர்காய நினைக்கிறார் கமல்: அமைச்சர் ஜெயக்குமார்

விஷ விதைகளை விதைத்து குளிர்காய நினைக்கிறார் கமல் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
விஷ விதைகளை விதைத்து குளிர்காய நினைக்கிறார் கமல்: அமைச்சர் ஜெயக்குமார்

விஷ விதைகளை விதைத்து குளிர்காய நினைக்கிறார் கமல் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
கமல் நடித்த திரைப்படங்களிலும், அவரின் அரசியலிலும் நாகரிகம் இல்லை. யாராக இருந்தாலும் விஷ விதைகளை விதைக்கக்கூடாது, தாம் செய்தது தவறு என கமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

அமைதியாக இருக்கும் தமிழகத்தில் மதக் கலவரம் உருவாக வேண்டும் என நினைக்கிறார். அமமுகவில் சேர்ந்தவர்கள் மீண்டும் அதிமுகவில் வந்து இணைவார்கள். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. 

தமிழ் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் 7 பேரை விடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com