மறைந்த பிரதமர் ராஜீவ் 28-வது ஆண்டு நினைவு தினம் செவ்வாய்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா, காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் உத்தரப் பிரதேச (கிழக்கு) காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வதேரா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தமிழக காங்கிரஸ் கட்சியினர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மறைந்த பிரதமர் ராஜீவ் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.