ரிசாட் 2-பி செயற்கைக்கோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட்

புவிப் பரப்பை தெளிவாக படம் பிடித்து அனுப்ப உதவும் ரிசாட்-2பி செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் புதன்கிழமை அதிகாலை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில்ரிசாட்-2பி செயற்கைக்கோளுடன் புதன்கிழமை அதிகாலை விண்ணில் செலுத்தப்பட உள்ள பி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட்
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில்ரிசாட்-2பி செயற்கைக்கோளுடன் புதன்கிழமை அதிகாலை விண்ணில் செலுத்தப்பட உள்ள பி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட்

புவிப் பரப்பை தெளிவாக படம் பிடித்து அனுப்ப உதவும் ரிசாட்-2பி செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் புதன்கிழமை அதிகாலை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து அதிகாலை 5.27 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்பட உள்ளது. இதை நேரில் பார்வையிட பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அனுமதி அளிக்க உள்ளது.
இஸ்ரோ ஏற்கெனவே 2009-இல் ரிசாட் 2 செயற்கைக்கோளையும், 2012-இல் ரிசாட் 1 செயற்கைக்கோளையும் விண்ணில் செலுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக இப்போது ரிசாட் 2-பி செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இரவிலும், பகலிலும் மட்டுமின்றி வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்போதுகூட, புவிப் பரப்பை மிகத் தெளிவாக படம் பிடித்து அனுப்புவதற்காகவே இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகின்றன.
48-ஆவது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்: இந்த செயற்கைக்கோள் இஸ்ரோவின் 48-ஆவது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. விண்ணில் ஏவப்பட்ட 15 நிமிடங்கள் 30 விநாடிகளில் ராக்கெட்டிலிருந்து செயற்கைக்கோள் பிரிக்கப்பட்டு, திட்டமிட்டபடி புவியிலிருந்து 557 கி.மீ. தொலைவில் தற்காலிக விண்வெளி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும்.  பின்னர் அடுத்த சில நாள்களில் செயற்கைக்கோள் படிப்படியாக உயர்த்தப்பட்டு, திட்டமிட்ட இறுதி சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்படும். இந்த செயற்கைக்கோளில் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன புகைப்பட சாதனம் இணைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், ரேடார் தொழில்நுட்பத்தின் உதவியுடன் புவியை தெளிவாகப் படம் பிடித்து தரைக் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பும்.
பொதுமக்களுக்கு அனுமதி: விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் குறித்த ஆர்வத்தை மாணவர்களிடம்  ஊக்குவிக்கும் வகையிலும், இந்திய விண்வெளி ஆராய்சசி மையத்தின் (இஸ்ரோ) நடவடிக்கைகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையிலும் பல்வேறு திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி45 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டபோது, அதைப் பார்வையிட முதன் முறையாக 1,000 பேருக்கு இஸ்ரோ அனுமதி வழங்கியது.
இதற்காகவே, இஸ்ரோ வளாகத்தில் விண்வெளி கண்காட்சியகம், பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையிலான திறந்தவெளி பார்வையாளர் மாடம், ராக்கெட், செயற்கைக்கோள் புகைப்பட கண்காட்சியகம் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் வரலாறு, தொழில்நுட்ப வளர்ச்சி அறிந்துகொள்வற்கான தகவல்கள் ஆகியவற்றைக்கொண்ட பூங்கா ஒன்றை இஸ்ரோ அமைத்துள்ளது. 
இப்போது, புதன்கிழமையன்று திட்டமிட்டுள்ள பி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் ஏவுதலை பொதுமக்கள் நேரில் பார்ப்பதற்கான,  முன்பதிவை கடந்த 16-ஆம் தேதி இஸ்ரோ தொடங்கியது. இதைப் பார்ப்பதற்கு ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்பட உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com