வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 23ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூட தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, கடந்த 19-ஆம் தேதியன்று நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை வரும் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 23ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூட தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.