வாக்கு எண்ணிக்கையின்போது மோசடி நடக்கலாம்: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடக்கலாம் என்பதால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின்போது மோசடி நடக்கலாம்: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடக்கலாம் என்பதால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

இந்திய மக்கள் எழுதியிருக்கும் தீர்ப்பு இன்னும் 3 நாள்களில் வெளிவரப் போகிறது. அதன் விளைவாக, ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் மக்கள் இரண்டு ஆட்சிகளை மாற்றுவதற்கானத் தீர்ப்புகளை எழுதியுள்ளனர். 
ஜனநாயக ரீதியில் மக்கள் எழுதிய தீர்ப்புகளை அதிகாரத்தின் கொடுங்கரங்கள் மூலம் எப்படித் திருத்தி எழுதலாம் என ஆட்சியில் இருப்பவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். அதனை முறியடிக்க வேண்டிய கடமை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறது.
மே 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் திமுகவின் முகவர்கள், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே மையங்களில் இருக்கவேண்டும். 
காலதாமதம் என்பதே கூடாது. வாக்கு எண்ணிக்கைக்காக மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் முறைப்படி அமைந்துள்ளனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். 
வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்வது பற்றி, வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள அதிகாரிகள் பலருக்கும் மத்திய, மாநில ஆட்சியாளர்களால் நிறைய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்பதை இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள எதிர்க்கட்சிகள் எச்சரிக்கையாகவே வெளியிட்டுள்ளன. அந்த எச்சரிக்கையை நாமும் அலட்சிப்படுத்திவிடக் கூடாது.
தேர்தல் நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிகள், 22 சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் அவர்கள் கவனம் செலுத்தும் நிலையில் மிகக் குறிப்பாக கோயம்புத்தூர், ராமநாதபுரம், கரூர், தேனி இந்த 4 தொகுதிகளிலும் அதிமுக - பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற எந்த எல்லைக்கும் செல்லும் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதற்கான உத்தரவுகள் அதிகாரிகளுக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் நம்பத்தகுந்த தகவல்கள் கிடைக்கின்றன.
அதனால், வாக்கு எண்ணிக்கை மைய முகவர்கள், மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் மிகவும் விழிப்புடன் இருந்து, வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் வரை, ஆளும் தரப்பு மற்றும் அதிகாரிகளின் மோசடித்தனங்கள் நடைபெறாத வகையில் கவனம் செலுத்த வேண்டும். 
எனவே, வெற்றியை அறுவடை செய்யும் நாளான மே 23 அன்று வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள முகவர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com