எனது தோல்வி உருவாக்கப்பட்ட தோல்வி, அதிகாரம், பணபலத்தால் தோற்கடிக்கப்பட்டேன் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
எனது தோல்வி உருவாக்கப்பட்ட தோல்வி, அதிகாரம், பணபலத்தால் தோற்கடிக்கப்பட்டேன். வாக்களித்த தேனி தொகுதி மக்களுக்கும், உழைத்த கூட்டணிக் கட்சியினருக்கும் நன்றி. தேனி தொகுதியில் தேர்தலின்போது நடைபெற்ற முறைகேடுகள் குறித்த ஆவணங்கள் கிடைத்துள்ளன.
வழக்கறிஞர்களுடன் பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும். பல மின்னணு இயந்திரங்களில் சீல் இல்லை. கேட்டால் அரக்கு கீழே விழுந்துவிட்டதாக கூறினர். தேனி மாவட்டத்தில் விவிபேட் வாக்குகளை முழுமையாக எண்ண வேண்டும். வட மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபடாததே காங்கிரசின் தோல்விக்கு காரணம்.
தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்தது. அதுபோல் வடமாநிலங்களில் அமையவில்லை. பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போன்ற தமிழக பாஜகவினர் மீது மோடிக்கு இல்லாத காதல் ஓபிஎஸ் மீது மட்டும் ஏன்?. இவ்வாறு அவர் கூறினார்.