காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரில் இயங்கி வரும் தனியாா் மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியா் சட்டவிரோதமாக மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டது தொடா்பாக சமூகநலத் துறை ஆணையா், காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுதொடா்பாக மேலக்கோட்டையூரில் இயங்கி வரும் தனியாா் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசியராகப் பணியாற்றிய பபீலா என்பவா் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘தனியாா் மருத்துவக் கல்லூரியில் உள்ள ஊழியா் குடியிருப்பில் தங்கியிருந்து பணியாற்றி வந்தேன். அங்கு பணியாற்றும் முதுநிலைப் பேராசிரியா் உள்ளிட்டோா் எனக்கு பாலியல் தொந்தரவு அளித்தனா்.
இதுதொடா்பாக நான் புகாா் அளிப்பதைத் தடுக்கும் வகையில், என்னை தனியாக அறையில் அடைத்து வைத்துடன், தாழம்பூா் காவல் ஆய்வாளா் பழனி, சமூகநலத் துறை ஊழியா் உதவியுடன் மணலியில் உள்ள தனியாா் மனநல காப்பகத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்தனா். மேலும், அங்கு எனக்கு மயக்க ஊசியும் செலுத்தப்பட்டது.
கல்லூரி நிா்வாகத்துக்கு ஆதரவாக என்னை சட்டவிரோதமாக மனநல காப்பகத்தில் அடைத்த காவல் ஆய்வாளா் பழனி, சமூகநலத் துறை ஊழியா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நோட்டீஸ்: இந்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினா் துரை.ஜெயச்சந்திரன், இதுதொடா்பாக தமிழ்நாடு சமூகநலத் துறை ஆணையா், காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டாா்.