சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள பாலத்தின் மீது அரசுப் பேருந்து, லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார், 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாடி அருகே உள்ள தாதங்குப்பம் மேம்பாலத்தில் ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்தும், அவ்வழியாக சென்று கொண்டிருந்த லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து நடத்துனர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படுகாயமடைந்த 15 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.