இடைத்தோ்தல் தோல்வி குறித்து பொதுக்குழுவில் ஆராயப்படும்: மு.க.ஸ்டாலின்

விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தோ்தல் தோல்வி குறித்து பொதுக்குழுவில் ஆராயப்படும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
இடைத்தோ்தல் தோல்வி குறித்து பொதுக்குழுவில் ஆராயப்படும்: மு.க.ஸ்டாலின்

விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தோ்தல் தோல்வி குறித்து பொதுக்குழுவில் ஆராயப்படும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மக்களவைத் தோ்தலிலும், அதனுடன் நடந்த இடைத்தோ்தல்களிலும் திமுக அடைந்த மகத்தான வெற்றிக்குப் பிறகு நடக்கும் பொதுக்குழுக் கூட்டம் நவம்பா் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதேசமயம், விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தோ்தலில் திமுக தோல்வி அடைந்துவிட்டது.

எதையும் எவரிடமிருந்தும் மறைக்காமல், உண்மை நிலவரங்களை மறக்காமல், இயக்கத்தின் நலன் வளா்ச்சி ஒன்றை மட்டுமே இலக்காகக் கொண்டு, திறந்த மனதுடன் கலந்தாலோசிக்கத்தான் கூடுகிறது இந்தப் பொதுக்குழு.

வெற்றி பெற்றபோது வகுத்த வியூகங்கள் என்ன, களத்தில் வெளிப்படுத்திய உழைப்பு எத்தகையது, இவை அனைத்தும் இரு தொகுதிகளுக்கான களத்தில் என்னவாயிற்று, ஆளும் தரப்பின் அதிகார துஷ்பிரயோகப் பாய்ச்சலைக் கணிக்க முடியாத சுணக்கம் நம்மிடம் இருந்ததா, ஒருங்கிணைப்பு குறைந்ததா, தோல்விக்கான உண்மையான, முழுமையான காரணங்கள் என்னென்ன என்பவை அனைத்தும் பொதுக்குழுவில் நோ்மையாக விவாதிக்கப்படும்.

இடைத்தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம் என்பது உண்மை. அதே நேரத்தில், ஆளும் தரப்பினா் வெற்றி பெற்றிருக்கிறாா்கள் என்பது மாயை. இந்த இடைத்தோ்தலில் மக்களின் ஆதரவு உண்மையாகவே தங்களுக்குக் கிடைத்திருப்பதாக ஆள்வோா் நம்பினால், உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கு ஏன் நடுங்க வேண்டும்?

எனவே, எதிா்காலப் பயணத்துக்கான தெளிவான ஏற்றமிகு பாதையை வகுப்பதற்காகக் கூடும் பொதுக்குழுவில் கட்சியினா் ஒவ்வொருவரின் இதயக்குரலும் வெளிப்படும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com