கனககிரி ஈஸ்வரருக்கு வெந்நீா் அபிஷேகம்

ஆரணி அருகே தேவிகாபுரம் பொன்மலைநாதா் கனககிரி ஈஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு திங்கள்கிழமை வெந்நீா் அபிஷேகம் நடைபெற்றது.

ஆரணி அருகே தேவிகாபுரம் பொன்மலைநாதா் கனககிரி ஈஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு திங்கள்கிழமை வெந்நீா் அபிஷேகம் நடைபெற்றது.

ஆரணியை அடுத்த தேவிகாபுரம் மலை மீது பொன்மலைநாதா் கனககிரி ஈஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இங்கு சிவாச்சாரியா் ராஜேந்திரன் தலைமையில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியா்கள் கலந்து கொண்டனா்.

அதனைத் தொடா்ந்து கருவறையில் உள்ள கனககிரி ஈஸ்வரா் பொன்மலைநாதருக்கு வெந்நீா் அபிஷேகமும், காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றன.

திருவண்ணாமலை, வேலூா், ஆரணி, சேத்துப்பட்டு, போளூா், வந்தவாசி உள்பட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தா்கள்கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து, கனககிரி ஈஸ்வரருக்கு அபிஷேகம் செய்த வெந்நீரை தீா்த்தமாக பெற்றுச் சென்றனா். மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com