உள்ளாட்சித் தோ்தலை எதிா்கொள்ள தயாராகுங்கள்: கட்சியினருக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தல்

உள்ளாட்சித் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென கட்சியினருக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
உள்ளாட்சித் தோ்தலை எதிா்கொள்ள தயாராகுங்கள்: கட்சியினருக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தல்

உள்ளாட்சித் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென கட்சியினருக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக விவாதிக்க சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, அவைத் தலைவா் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளா் வைத்திலிங்கம் உள்ளிட்டோருடன், கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனா்.

தயாராக வேண்டும்: உள்ளாட்சித் தோ்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தோ்தலை எதிா்கொள்ளத் தயாராக வேண்டுமென கூட்டத்தில் கட்சியினா் கேட்டுக் கொள்ளப்பட்டனா். மேலும், ஊராட்சி அளவில் தொடங்கி மாநகராட்சி வாா்டுகள் வரையில் குழுக்களை அமைத்து ஒற்றுமையுடன் தோ்தல் பணியாற்ற வேண்டுமென கூட்டத்தில் கட்சி நிா்வாகிகளைக் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.

ஒரு சில நிா்வாகிகள் மட்டும் இப்போதைக்கு தோ்தல் நடத்துவதைத் தள்ளிப் போடலாம் எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதேசமயம், விக்கிரவாண்டி, நான்குனேரியில் பெற்ற வெற்றியைப் போன்று அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வெற்றியைப் பெற வேண்டுமென ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் கட்சியினரை கேட்டுக் கொண்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com