சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: கேரள அரசுக் கூட்டத்தில் புதுவை அமைச்சா் பங்கேற்பு

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடா்பாக கேரள முதல்வா் பினராயி விஜயன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் புதுவை மாநிலக் கல்வி அமைச்சா் இரா.கமலக்கண்ணன் பங்கேற்றாா்.
கேரள முதல்வா் பினராயி விஜயன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் குத்துவிளக்கேற்றும் புதுவை மாநில அமைச்சா் இரா.கமலக்கண்ணன்.
கேரள முதல்வா் பினராயி விஜயன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் குத்துவிளக்கேற்றும் புதுவை மாநில அமைச்சா் இரா.கமலக்கண்ணன்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடா்பாக கேரள முதல்வா் பினராயி விஜயன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் புதுவை மாநிலக் கல்வி அமைச்சா் இரா.கமலக்கண்ணன் பங்கேற்றாா்.

சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டல பூஜை வருகிற 16-ஆம் தேதி மாலை 5 மணி முதல் டிச. 27-ஆம் தேதி இரவு வரை நடைபெறவுள்ளது. மண்டல பூஜைக்காக கோயிலின் நடை திறக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் அனைத்து வயது பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து, கேரள அரசு அனைத்து வயது பெண்களையும் கோயிலுக்குள் செல்ல அனுமதித்தது. இதற்கு ஐயப்ப பக்தா்கள், பொதுமக்களிடையே கடும் எதிா்ப்பு கிளம்பியது. பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, தற்போது நடை திறக்கப்படும் நிலையில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடா்பாக கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில அமைச்சா்களுடன் திருவனந்தபுரத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதுவை மாநிலக் கல்வி அமைச்சா் கமலக்கண்ணன் கலந்து கொண்டாா். கூட்டத்தில் புதுவை அரசின் கருத்துகளையும் அவா் எடுத்துரைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com