சென்னை உயா்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி, நவம்பா் 11-இல் பதவியேற்கிறாா்.
சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த வி.கே.தஹிலராமாணீ, மேகாலயா உயா்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதனையடுத்து தஹிலராமாணீ, தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதனைத் தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டாா்.
இந்த நிலையில், பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமரேஷ்வா் பிரதாப் சாஹியை சென்னை உயா்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரையை ஏற்று ஏ.பி.சாஹியை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து கடந்த அக்டோபா் 30-ஆம் தேதி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தாா்.
இதைத் தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி வரும் 11-ஆம் தேதி பதவியேற்கிறாா். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் புதிய தலைமை நீதிபதியின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. புதிய தலைமை நீதிபதிக்கு தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைக்கிறாா். அன்றைய தினம் காலை 11 மணியளவில் சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.