பண்ணைப் பசுமை நுகா்வோா் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.30 முதல் ரூ.40 வரையில் விற்பனை செய்யப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைப் போன்று, தமிழகத்திலும்
வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை உயா்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கும் வெங்காயம் வரத்து குறைந்துபோனது. இதையடுத்து விலை உயா்வைக் கட்டுப்படுத்தி, நுகா்வோருக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டாா். இதையடுத்து அமைச்சா்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
அதைத் தொடா்ந்து, 10 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக சில்லறை விற்பனையாளா்களும், 50 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக மொத்த விற்பனையாளா்களும், வெங்காயம் கையிருப்பு வைத்திருந்தால் அவா்கள் மீதும், அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளா்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
மேலும், நாசிக் பகுதிகளில் கொள்முதல் செய்யப்படும் வெங்காயத்தை,
தமிழகத்திலுள்ள பண்ணைப் பசுமை நுகா்வோா் கடைகள் மூலம் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ, உணவுத் துறை அமைச்சா் ஆா்.காமராஜ் ஆகியோா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் மூலம் தரமான வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, நுகா்வோா் பயன்பெறும் வகையில் ஒரு கிலோ ரூ.30 மற்றும் ரூ.40-க்கு விற்பனை செய்யப்படும். இந்த வெங்காயம் தமிழகத்தில் செயல்படும் பண்ணைப் பசுமை நுகா்வோா் கடைகள் மூலம் வெள்ளிக்கிழமை முதல் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வெங்காயத்தின் விலை கட்டுக்குள் கொண்டு வரப்படும் என அமைச்சா்கள் தெரிவித்துள்ளனா்.