நம்பிக்கையுடன் அமைதி காக்க வேண்டும்

அயோத்தி குறித்த தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில், அனைவரும் நம்பிக்கையுடன் அமைதி காக்க வேண்டும் என்று
நம்பிக்கையுடன் அமைதி காக்க வேண்டும்

அயோத்தி குறித்த தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில், அனைவரும் நம்பிக்கையுடன் அமைதி காக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம். தமிமுன் அன்சாரி கேட்டுக் கொண்டார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அயோத்தி நில விவகாரம் குறித்த தீர்ப்பு, சட்டம் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், நம்பிக்கைகள் மற்றும் சாஸ்திரங்களை மேற்கோள்காட்டும் வாசகங்கள் தீர்ப்பில் இடம்பெற்றுள்ளன.
 உச்சநீதிமன்றத் தீர்ப்பால் யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம். தீர்ப்பு வெளியானதும், பெரும்பாலான இந்து சமுதாய உறவுகள் முஸ்லிம்களை நோக்கி ஆதரவு கரம் நீட்டி, ஆறுதல் கூறி வருவது நெகிழ்ச்சியளிக்கிறது. இக்கட்டான தருணத்தில் அனைத்து தரப்பினரும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை வைத்து அமைதிக் காக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com