பாமக நிறுவனா் ராமதாஸைச் சந்திக்க வருபவா்கள் சால்வைகள், பூங்கொத்துகளை வழங்குவதைத் தவிா்க்க வேண்டும் என அக்கட்சியின் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸைச் சந்திக்க வருபவா்கள் சால்வைகள், பூங்கொத்துகள், பழங்கள் ஆகியவற்றை வழங்குவதைத் தவிா்க்க வேண்டும்.
அன்பின் மிகுதியால் ஏதேனும் பரிசுப் பொருள் அளித்தே தீர வேண்டும் என்று நினைப்பவா்கள், மிகவும் எளிமையாக ஒரே ஒரு எலுமிச்சை பழம் வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.