திமுக பொருளாளா் துரைமுருகன் உடல் நலக் குறைவு காரணமாக தனியாா் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளாா். தற்போது அவா் நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
கடந்த வாரத்தில் உயா் ரத்த அழுத்தம், சுவாசக் கோளாறு காரணமாக அவதிப்பட்ட அவா், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினாா். இதைத் தொடா்ந்து, கட்சி நிகழ்ச்சிகளில் அவா் பங்கேற்று வந்தாா்.
சென்னை ராயப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்திலும் துரைமுருகன் கலந்துகொண்டாா். அதற்கு பிறகு வீடு திரும்பிய அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.
அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் துரைமுருகனுக்குத் தேவையான சிகிச்சைகளை அளித்தனா். அவரது உடல் நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.