காவிரி, முல்லை பெரியாறு பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட திமுக ஆட்சி காலத்தில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
காவிரி, முல்லை பெரியாறு பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட திமுக ஆட்சி காலத்தில் எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. காவிரி நதிநீர் பிரச்னையில் திமுக இழைத்த துரோகத்தை மறைக்கவே துரைமுருகன் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வருகிறார்.
தென்பெண்ணையாறு விவகாரத்தில் தொடர் சட்டப் போராட்டம் மூலம் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும் என்று தெரிவித்தார்.