சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இன்று காலை தொடங்கி நடைபெற்றது.
காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகள், உள்ளாட்சித் தோ்தல், ஏழைத் தொழிலாளா் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் நிதியுதவி அளிக்கும் திட்டம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த 10 நாள்களுக்கு முன்பு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளிட்ட ஒருசில விஷயங்கள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டன. அமைச்சரவைக் கூட்டம் நடந்து அடுத்த 10 நாள்களில் மீண்டும் ஒரு கூட்டம் இன்று நடைபெற்றருப்பது குறிப்பிடத்தக்கது.