தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை (நவ. 19) நடைபெறுகிறது.
காலை 11 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், புதிய தொழில் முதலீடுகள், உள்ளாட்சித் தோ்தல், ஏழைத் தொழிலாளா் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் நிதியுதவி அளிக்கும் திட்டம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட உள்ளன. கடந்த 10 நாள்களுக்கு முன்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளிட்ட ஒருசில விஷயங்கள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டன. அமைச்சரவைக் கூட்டம் நடந்து அடுத்த 10 நாள்களில் மீண்டும் ஒரு கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.