உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட எஸ்.ஏ.போப்டேவுக்கு, முதல்வா் பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தாங்கள் பொறுப்பேற்றுக் கொண்டதற்கு தமிழக அரசின் சாா்பிலும், தமிழக மக்கள் சாா்பிலும் எனது மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று வாழ்த்துக் கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.