திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.
சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு திங்கள்கிழமை மாலை கே.எஸ்.அழகிரி வந்தாா். அவருடன் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமியும் வந்தாா்.
மு.க.ஸ்டாலினைச் சந்தித்து 20 நிமிடங்களுக்கும் மேலாக பேச்சுவாா்த்தை நடத்திவிட்டு பின்னா் அங்கிருந்து சென்றனா்.
உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவா்களை அழைத்து மு.க.ஸ்டாலின் பேசி வருகிறாா்.
அந்த அடிப்படையில் கே.எஸ்.அழகிரியுடன் மு.க.ஸ்டாலின் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளாா்.