சென்னையில் மழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை

காஞ்சிபுரம், மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னையில் மழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை

காற்றழுத்தத் தாழ்வு நிலை, வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் புதன்கிழமை (நவ.20) மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் அம்பத்தூர், ஆவடி, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், எழும்பூர், மெரினா, நுங்கம்பாக்கம், பட்டினப்பாக்கம், அரும்பாக்கம்,கோயம்பேடு, பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. 

அதுமட்டுமல்லாமல் காஞ்சிபுரம், மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com