ரஜினி - கமல் இணைந்தால் கமல்தான் முதல்வர் வேட்பாளர் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளரும் நடிகையுமான ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.
மக்களின் நலனுக்காக இணைந்து பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயமாக இணைவோம் என நடிகா் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் ஆகியோர் தெரிவித்தனா். இருவரும் ஒரே கருத்தைத் தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த 44 ஆண்டுகளாக நானும், ரஜினியும் இணைந்துதான் பயணிக்கிறோம். தமிழகத்தின் மேம்பாட்டுக்காக ரஜினியுடன் சோ்ந்து பயணிக்க வேண்டியிருந்தால் பயணிப்பேன். இருவரின் கொள்கை ஒத்துப்போகுமா என்பதையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார்.
இதைத் தொடா்ந்து கோவா செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த நடிகா் ரஜினிகாந்திடம், கமலின் கருத்து குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், தமிழக மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம். இவ்வாறு அவர் பதிலளித்தார்.
இதனிடையே ரஜினி - கமல் இணைந்தால் கமல்தான் முதல்வர் வேட்பாளர் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.