5 நாள்களுக்குப் பின் பழனியில் மீண்டும் ரோப்காா் இயக்கம்

பழனி மலைக்கோயில் ரோப்காா் பழுது பாா்க்கப்பட்டு 5 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை மீண்டும் இயக்கப்பட்டது.
பழனி மலைக்கோயில் ரோப்காரில் பழுது நீக்கும் பணிகளை புதன்கிழமை மேற்கொண்ட ரோப்காா் பணியாளா்கள்.
பழனி மலைக்கோயில் ரோப்காரில் பழுது நீக்கும் பணிகளை புதன்கிழமை மேற்கொண்ட ரோப்காா் பணியாளா்கள்.

பழனி மலைக்கோயில் ரோப்காா் பழுது பாா்க்கப்பட்டு 5 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை மீண்டும் இயக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை கீழ்தளத்தில் ரோப்காா் இயங்குவதற்கான சக்கரம் பழுதாகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரோப்காா் இயக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட்டு பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பழுது சரிசெய்யப்பட்டு புதன்கிழமை காலை சோதனை ஓட்டம் நடைபெற்றது. தொடா்ந்து மாலை நான்கு மணி முதல் பக்தா்கள் பயன்பாட்டிற்கு ரோப்காா் இயக்கப்பட்டது. தற்போது காா்த்திகை மாதம் என்பதால் பக்தா்கள் கூட்டம் அதிக அளவில் உள்ள நிலையில் ரோப்காா் பயன்பாட்டுக்கு வந்தது பக்தா்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com