குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
குற்றாலம் பகுதியில் புதன்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, ஐயப்ப பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
வியாழக்கிழமை அதிகாலை வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து, அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கான தடைநீக்கப்பட்டது. அதிகக் கூட்டம் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.