சென்னை: உரத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டால், விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்கள்.
மத்திய - மாநில அரசுகள் அலட்சியப் போக்கினைக் கைவிட்டு உரத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.