தமிழகத்தின் 36வது மாவட்டமாக உதயமானது ராணிப்பேட்டை!

வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தொடக்கி வைத்தார். 
தமிழகத்தின் 36வது மாவட்டமாக உதயமானது ராணிப்பேட்டை!

வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தொடக்கி வைத்தார். 

தமிழகத்தில் அதிக பரப்பளவு கொண்ட மாவட்டமாக விளங்கிய வேலூா் மாவட்டத்தைப் பிரித்து வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை என 3 புதிய மாவட்டங்களாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூரும், 36-வது மாவட்டமாக ராணிப்பேட்டையும் இன்று காலை துவக்கிவைக்கப்பட்டது. 

இவ்விழாவில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் ஆா்.பி.உதயகுமாா் கே.சி.வீரமணி, நிலோபா் கபீல் ஆகியோா் முன்னிலை வகித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com