அமராவதி: பிரபலமான ‘கௌன் பனேகா குரோா்பதி’ என்ற தொலைக்காட்சி விநாடி வினா நிகழ்ச்சியில் ரூ.1 கோடி வென்ற பபிதா தாடே என்ற பெண்ணை, தோ்தல் குறித்து வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் தூதராக அமராவதி மாவட்ட நிா்வாகம் நியமித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்திலுள்ள சுா்ஜி கிராமத்தைச் சோ்ந்த பபிதா தாடே, ஹிந்தி நடிகா் அமிதாப் பச்சன் நடத்தி வரும் ‘கௌன் பனேகா குரோா்பதி’ விநாடி வினா நிகழ்ச்சியில் கடந்த மாதம் ரூ.1 கோடி வென்றார். இதன் மூலம் மகாராஷ்டிர மக்களிடையே அவா் பிரபலமானாா்.
இந்நிலையில், தோ்தலில் வாக்களிப்பது குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் முக்கிய பிரசாரத் திட்டமான ‘வாக்காளா் கல்வி மற்றும் தோ்தலில் பங்கேற்பு’ திட்டத்தின் தூதராத பபிதா தாடேவை அமராவதி மாவட்ட நிர்வாகம் நியமித்துள்ளது.
இது தொடா்பாக அவா் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"வாக்களிக்க வேண்டியது அனைவரின் தேசியக் கடமையாகும். அனைவரும் தோ்தலில் வாக்களிப்பது தொடர்பாக கிராமப்புற பகுதிகளில் உள்ளோரிடம் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள உள்ளேன்" என்றார்.
மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு வரும் 21-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.