எல்லை தாண்டி மீன் பிடித்த விவகாரத்தில் இலங்கை மீனவர்கள் 18 பேரை இந்திய கடலோரக் காவல்படையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
இந்திய எல்லைப் பகுதியில் மீன் பிடித்த காரணத்தால் அவர்களிடம் இருந்து 8 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட 18 இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்களின் 8 படகுகளும் காரைக்கால் துறைமுகத்துக்கு இந்திய கடலோரக் காவல்படையால் வெள்ளிக்கிழமை காலை கொண்டுவரப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.