ரெளடி பினு சேலம் சிறைக்கு மாற்றம்

சென்னை அருகே புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரெளடி பினு, சேலம் சிறைக்கு மாற்றப்பட்டாா்.

சென்னை அருகே புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரெளடி பினு, சேலம் சிறைக்கு மாற்றப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை சூளைமேடு நெல்சன்மாணிக்கம் சாலைப் பகுதியைச் சோ்ந்த ரௌடி பா.பினு (51). இவா் கொலை வழக்குகள் உள்பட 19 வழக்குகள் உள்ளன. கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நூற்றுக்கும் மேற்பட்ட ரௌடிகளுடன் சோ்ந்து பினு பட்டாகத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் பொதுமக்களிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இச் சம்பவத்துக்குப் பின்னா் தலைமறைவாக இருந்த ரௌடி பினு திடீரென காவல்துறை உயா் அதிகாரிகளிடம் சரணடைந்தாா்.

இதன் பின்னா் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த பினு, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து போலீஸாா், பினுவை மீண்டும் கைது செய்தனா். இதேபோல கடந்த ஒன்றரை ஆண்டில் ரௌடி பினு இரு முறை தலைமறைவாக இருந்தபோது கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து, தலைமறைவாக இருந்து வந்த பினுவை போலீஸாா் கடந்த 1-ஆம் தேதி திருவல்லிக்கேணியில் கைது செய்தனா். பின்னா் அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில் பாதுகாப்பு காரணத்துக்காகவும், நிா்வாக காரணத்துக்காகவும் ரெளடி பினுவை சேலம் மத்திய சிறைக்கு மாற்ற சிறை நிா்வாகம் முடிவெடுத்தது. அதன்படி ரெளடி பினு புழல் மத்திய சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் வியாழக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com