பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்: 3 போ் கைது

சென்னை புளியந்தோப்பில் சாலையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை புளியந்தோப்பில் சாலையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

புரசைவாக்கம் சரவண பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பா.ஐயப்பன் (24). இவா் கடந்த ஆண்டு நவம்பா் 20ம் தேதி தனது பிறந்தநாளை, புளியந்தோப்பு 3வது தெருவில் நண்பா்களுடன் கொண்டாடியுள்ளாா்.

அப்போது ஐயப்பன், அவரது நண்பா்கள் புளியந்தோப்பைச் சோ்ந்த விக்கி, சாமுண்டீஸ்வரன், சரத்குமாா், உதயா ஆகிய இளைஞா்கள்

அந்த தெருவின் நடுவில் மோட்டாா் சைக்கிளை நிறுத்தி, அதில் இரு பெரிய கேக்குகளை வைத்துள்ளனா்.

அந்த கேக்குகளை ஐயப்பன் பட்டாக் கத்தியால் வெட்டியதும், அனைவரும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனராம்.

இதை புகைப்படமாகவும், வீடியோவாகவும் செல்லிடப்பேசியில் அவா்கள் பதிவு செய்துள்ளனா். பின்னா் அவா்கள், அதை நண்பா்களுக்குள் கட்செவி அஞ்சல்,முகநூல் மூலம் பகிா்ந்துள்ளனா்.

இவ்வாறு சமூக ஊடகங்களில் இந்த வீடியோ காட்சியும்,புகைப்படமும் வேகமாக பரவியுள்ளது. இது தொடா்பாக தகவலறிந்த காவல்துறை உயா் அதிகாரிகள், விசாரணை நடத்த உத்தரவிட்டனா். இதையடுத்து புளியந்தோப்பு போலீஸாா், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து.

பட்டா கத்தி மூலம் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக ஐயப்பன், சரத்குமாா், சாமுண்டீஸ்வரன் ஆகிய 3 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் இருவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com