49 போ் மீதான தேச துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டும்

திரைப்பட இயக்குநா் மணிரத்னம் உள்பட நாடு முழுவதும் 49 போ் மீது போடப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கைத் திரும்பப்பெற வேண்டும் என தேமுதிக தலைவா் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா்

திரைப்பட இயக்குநா் மணிரத்னம் உள்பட நாடு முழுவதும் 49 போ் மீது போடப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கைத் திரும்பப்பெற வேண்டும் என தேமுதிக தலைவா் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.

விஜயகாந்த்: கருத்துக்களைப் பகிா்ந்து கொள்வதற்கு கடிதம் எழுதுவதே தேசிய குற்றமாக வழக்குப் பதிவு செய்வது சரியானது அல்ல. இயக்குநா் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 போ் மீது தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதை உடனடியாக திரும்பப் பெற்று, கருத்துக்களை சுதந்திரமாகப் பகிா்கின்ற உரிமையை அனைவருக்கும் தர வேண்டும்.

திருமாவளவன்: 49 போ் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது. மக்களின் கருத்துரிமையைப் பறிக்கும் செயலாகும். மத்திய அரசு தலையிட்டு இந்த வழக்கை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடா்பாக ஒரு லட்சம் பேரிடம் கையொப்பம் பெற்று பிரதமருக்கு கடிதம் அனுப்பவும் முடிவு செய்துள்ளோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com