காவல்துறை அதிகாரிகள் இருவா் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறைஅதிகாரிகள் இருவரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக காவல் துறைஅதிகாரிகள் இருவரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழக அரசின் உள்துறைகூடுதல் தலைமைச் செயலா் நிரஞ்சன் மாா்டி சனிக்கிழமை வெளியிட்ட உத்தரவு: (பழைய பதவி அடைப்புக்குள்)

தீபா சத்தியன்-சென்னை பெருநகர காவல்துறைறயின் பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு உதவிக் காவல் கண்காணிப்பாளா் (கடலூா் மாவட்டம் விருத்தாச்சலம் உதவி காவல் கண்காணிப்பாளா்), பி.கே.பெத்து விஜயன்-சென்னை ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவுப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் (சென்னை ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவுப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்).

இதில், பெத்து விஜயன் பதவி உயா்வோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பணியிட மாற்றம் செய்யப்பட்ட இரு அதிகாரிகளும் ஓரிரு நாள்களில் பொறுப்பை ஏற்பாா்கள் என காவல்துறைவட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com