தமிழகத்தில் சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (அக்.6) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது: வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (அக்.6) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில்
ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றறாா் அவா்.
மழை அளவு: சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் சங்கரிதுா்க்கத்தில் 80 மி.மீ., கிருஷ்ணகிரியில் 70 மி.மீ., வேலூா் மாவட்டம் ஆம்பூா், நாமக்கல்லில் தலா 50 மி.மீ., நீலகிரி மாவட்டம் தேவாலா, ஈரோடு மாவட்டம் பெருந்துறைறயில் தலா 40 மி.மீ மழை பதிவானது.