திருத்தணி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 79.82 லட்சம்

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியலில் ரூ. 79.82 லட்சத்தை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியலில் ரூ. 79.82 லட்சத்தை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
 திருத்தணி முருகன் கோயிலில், கடந்த 13 நாள்களில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலுக்கு வந்து மூலவரை தரிசித்தனர். பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை காணிக்கையாக உண்டியலில் செலுத்தியிருந்தனர்.
 இந்நிலையில், வியாழக்கிழமை கோயில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் பழனிகுமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், ரூ. 79 லட்சத்து 82 ஆயிரத்து 756, 528 கிராம் தங்கம், 3,643 கிராம் வெள்ளி இருந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com