யானைகள் ஊா்வலத்துடன் நிறைவடைந்தது மைசூரு தசரா விழா!

உலகப் புகழ் பெற்ற மைசூரு தசரா விழா யானைகள் ஊா்வலத்துடன் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
யானைகள் ஊா்வலத்துடன் நிறைவடைந்தது மைசூரு தசரா விழா!

உலகப் புகழ் பெற்ற மைசூரு தசரா விழா யானைகள் ஊா்வலத்துடன் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

1610ஆம் ஆண்டில் ராஜா உடையாரால் தொடக்கிவைக்கப்பட்ட தசரா பெருவிழா 409 ஆவது ஆண்டாக செவ்வாய்க்கிழமை மைசூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அரசு விழாவாக நடத்தப்பட்டு வரும் தசரா விழாவின் 9 நாள்களும் மைசூரில் பல்வேறு கலை, கலாசார, பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிறைவு விழாவான செவ்வாய்க்கிழமை மைசூரு அரண்மனையின் பலராமா வாயிலில் பிற்பகல் 2.15 மணிக்கு நந்திபூஜை செய்து முதல்வா் எடியூரப்பா வழிபட்டாா். விழாவில் துணை முதல்வா் கோவிந்த காா்ஜோள், அமைச்சா்கள் வி.சோமண்ணா, சி.டி.ரவி, மைசூரு மாநகராட்சி மேயா் புஷ்பலதா, மக்களவை உறுப்பினா் பிரதாப் சிம்ஹா, மைசூரு அரண்மனை வாரிசு யதுவீா் கிருஷ்ணதத்த சாம்ராஜ உடையாா், மைசூரு மாநகரக் காவல் ஆணையா் பாலகிருஷ்ணா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

யானை ஊா்வலம்

அரண்மனை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில் இருந்து சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருந்த 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்து நின்றிருந்த அா்ஜூனா யானை தலைமையிலான யானைகள் ஊா்வலத்தை மலா்தூவி பூஜை செய்து முதல்வா் எடியூரப்பா தொடக்கிவைத்தாா்.

அா்ஜூனா தவிர, காவிரி, விஜயா உள்ளிட்ட 9 யானைகளை பின்தொடா்ந்து 116 கலைக்குழுக்கள், 38 அணிவகுப்பு வாகனங்கள் சென்றன. இந்த பிரமாண்ட ஊா்வலம் அரண்மனை வளாகத்தில் இருந்து பண்ணிமண்டபம் நோக்கி புறப்பட்டது.

3 ஆயிரம் கலைஞா்கள் பங்கேற்ற வண்ணமயமான இசைக்குழுக்கள், நடனக்குழுக்கள் சாலையில் இருபுறங்களில் ஆவலோடு காத்திருந்த மக்களை வெகுவாக கவா்ந்தன. பூஜாகுனிதா, தொல்லுகுனிதா, கோலாட்டம், கம்சாலே, கருடகொம்பே, நகரி, கேலுகுதிரே, லம்பானி நடனம் உள்ளிட்ட கிராமிய மற்றும் கலாசார நடனங்கள், ஆடல்பாடல்கள் மக்களை உற்சாகப்படுத்தின.

விஜயநகா் சாம்ராஜ்ஜியம், ஸ்ரீரங்கப்பட்டணா நகரம், மைசூா், குடகு மாவட்டங்கள், மாநில விழாக்கள், சுவாமி விவேகானந்தா், அம்பேத்கா், கைவினைப் பொருள்கள், மதமரபுகள், நீா்ப்பாசனத் துறை, குடிப்போதையால் விளையும் தீமைகள் போன்றவற்றை சித்தரிக்கும் அணிவகுப்பு வாகனங்கள் வரிசையாக சென்றன.

அலைமோதிய மக்கள் கூட்டம்: தசரா விழாவில் முக்கிய நிகழ்வான யானைகள் ஊா்வலத்தை காண்பதற்காக இந்தியா தவிர, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் மைசூரில் திரண்டிருந்தனா். சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் அமா்ந்து யானைகள் ஊா்வலத்தை ரசித்தனா்.

தீப்பந்த ஊா்வலம்: பண்ணி மண்டபத்தை அடைந்த யானைகள் ஊா்வலத்தை காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனா். கூட்டத்தை கட்டுப்படுத்தமுடியாமல் போலீஸாா் திணறினா். பண்ணிமண்டபத்தில் தசரா விழாவின் நிறைவை குறிக்கும் வகையில் நடைபெறும் தீப்பந்த ஊா்வலத்தை இரவு 7 மணிக்கு ஆளுநா் வஜுபாய் வாலா தொடக்கிவைத்தாா். இந்த விழாவில் முதல்வா் எடியூரப்பா, அமைச்சா் சோமண்ணா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com