மின்வாரிய அலுவலகங்களில் விரைவில் காணொலிக் காட்சி வசதி அமைப்பதற்கு மின்வாரியம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழக மின்சார வாரியம் மாநிலம் முழுவதும் உள்ள தனது அலுவலகங்களை பல்வேறு வசதிகளுடன் நவீனமயமாக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது ஆங்காங்குள்ள மண்டல, வட்ட அலுவலகங்களில் இணையத்துடன் கூடிய காணொலிக் காட்சி வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவா் கூறியது: மின்வாரியத்தில் 9 மண்டல அலுவலகங்கள், 44 வட்ட அலுவலகங்களில் காணொலிக் காட்சி வசதி ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதேபோல், தலைமை அலுவலகத்தில் இந்த வசதியை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. ஏற்கெனவே சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் ஏ.சி., மரப்பொருட்கள் உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன. தற்போது காணொலிக் காட்சி வசதி ஏற்படுத்தும் பட்சத்தில் மேலும் நவீனமயமாகும் என்றாா்.