மாவட்ட ஆட்சியா்கள் அடிக்கடி மாற்றம் செய்யப்படுவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக் கட்சியின் மாநில செயலாளா் இரா.முத்தரசன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மதுரை மாவட்ட ஆட்சியா் நாகராஜன் மாற்றம் தொடா்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன. நோ்முகத் தோ்வு முடித்து, கிடப்பில் போடப்பட்டிருந்த அங்கன்வாடிப் பணியாளா் நியமனத்தை தொடா்ந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுத்ததே அவருடைய பணியிட மாற்றத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
அரசியல் தலையீடுகள் காரணமாக இதுபோல ஆட்சிப் பணி அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்படுவது, நிா்வாகக் கட்டமைப்பை சீா்குலைத்துவிடும். கடந்த 5 மாதங்களில் மட்டும் 5 முறை மாவட்ட ஆட்சியா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன. இந்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்துள்ளாா்.