மக்களின் வரவேற்பு எங்களுக்கு வாக்குகளாக மாறும் 

மக்களின் வரவேற்பும், எழுச்சியும் எங்களுக்கு வாக்குகளாக மாறும் என புதுவை எதிர்க்கட்சித் தலைவரும், என்.ஆர். காங்கிரஸ் நிறுவனர் தலைவருமான என். ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
மக்களின் வரவேற்பு எங்களுக்கு வாக்குகளாக மாறும் 

மக்களின் வரவேற்பும், எழுச்சியும் எங்களுக்கு வாக்குகளாக மாறும் என புதுவை எதிர்க்கட்சித் தலைவரும், என்.ஆர். காங்கிரஸ் நிறுவனர் தலைவருமான என். ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
 புதுச்சேரி காமராஜர்நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் புவனா (எ) புவனேஸ்வரனை ஆதரித்து என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை முத்தியால்பேட்டை செந்தாமரை நகரில் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
 அவருடன் என்.ஆர். காங்கிரûஸ சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜவேலு, முன்னாள் வாரியத் தலைவர் பாலமுருகன், அதிமுக மாநிலச் செயலர் புருஷோத்தமன், சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் அன்பழகன் எம்எல்ஏ, மாநில பாஜக தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ, உள்ளிட்டோரும் சென்று வாக்குச் சேகரித்தனர்.
 இந்த பிரசாரத்தின் போது என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களிடம் எங்களக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அவர்களது வரவேற்பும், எழுச்சியும் எங்களுக்கு வாக்குகளாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.முதியோர் உதவித்தொகை தரவில்லை. உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை. குடிநீர் உப்பு நீராக வருகிறது. இலவச அரிசி தரவில்லை என மக்கள் மாநில அரசின் மீது நிறைய குறைகளைக் கூறுகின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மேற்கண்ட குறைகளை சரி செய்வோம் என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com