சென்னை: வரும் அக்டோபர் 25 முதல் தமிழகத்தில் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக, அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நெடுங்காலமாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது
வரும் 25-ஆம் தேதி முதல் இந்த வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.
அதேசமயம் மருத்துவமனைகளில் உள்ள உயிர் காக்கும் அவசர சிகிச்சை பிரிவு, காய்ச்சல் சிகிச்சை பிரிவு ஆகியவை பாதிக்காத வகையில் இந்த வேலைநிறுத்தம் நடைபெறும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.