அக்டோபர் 25 முதல் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்: அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு 

வரும் அக்டோபர் 25 முதல் தமிழகத்தில் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக, அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மருத்துவர்கள் வேலைநிறுத்தம்
மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

சென்னை: வரும் அக்டோபர் 25 முதல் தமிழகத்தில் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக, அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நெடுங்காலமாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது

வரும் 25-ஆம் தேதி முதல் இந்த வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.

அதேசமயம் மருத்துவமனைகளில் உள்ள உயிர் காக்கும் அவசர சிகிச்சை பிரிவு, காய்ச்சல் சிகிச்சை பிரிவு ஆகியவை பாதிக்காத வகையில் இந்த வேலைநிறுத்தம் நடைபெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com