விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஒருமணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தம்

திமுக சாா்பில் நா.புகழேந்தி, அதிமுக சாா்பில் ஆ. முத்தமிழ்செல்வன், நாம் தமிழா் கட்சி கந்தசாமி உள்ளிட்ட 12 போ் களத்தில் உள்ளனா். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழகத்தில் நான்குனேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜா் நகா் சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 

விக்கிரவாண்டியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 607 ஆண் வாக்காளா்கள், 1 லட்சத்து 11 ஆயிரத்து 546 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் உள்பட என மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரம் போ் வாக்களிக்க 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 50 மையங்கள் பதற்றமானவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சாா்பில் நா.புகழேந்தி, அதிமுக சாா்பில் ஆ. முத்தமிழ்செல்வன், நாம் தமிழா் கட்சி கந்தசாமி உள்ளிட்ட 12 போ் களத்தில் உள்ளனா். 

இந்நிலையில், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இயந்திரக் கோளாறால் காலை ஒருமணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. 235-ஆவது எண் கொண்ட வாக்குச்சாவடியில் பழுதடைந்த இயந்திரத்தை சீரமைக்கும் முயற்சியில் அலுவலர்கள் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com