தென் தமிழகம், அதையொட்டிய குமரிக்கடல் பகுதி மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காணப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த இரு நாள்களாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இதையடுத்து ராமநாதபுரம், சேலம் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் செவ்வாய்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செவ்வாய்கிழமை விடுமுறை வழங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
சென்னையில் வழக்கம்போல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கும் என ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.