பயபக்தியோடு மண்சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்: பேனருக்கு பதில் 12 சிசிடிவி கேமரா வைத்து அசத்தல்

மயிலாடுதுறையில் உள்ள கோயிலில், ஏராளமான விஜய் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தியுள்ளனர்.
பயபக்தியோடு மண்சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்
பயபக்தியோடு மண்சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்


நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் உள்ள கோயிலில், ஏராளமான விஜய் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தியுள்ளனர்.

விஜய் நடிப்பில் வெளியாக உள்ள பிகில் படம் எந்த பிரச்னையும் இல்லாமல் வெளியாகி, வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலோடு, விஜய் ரசிகர்கள் ஏராளமானோர், கோயிலில் மண் சோறு சாப்பிட்டு நேரத்திக் கடன் செலுத்தினர்.

விஜய் நடித்திருக்கும் பிகில் படம் சில சட்டப் பிரச்னைகளை சந்தித்து வரும் நிலையில், படம் எந்த பிரச்னையும் இல்லாமல் வெளியாகி வெற்றி பெற வேண்டும் என்று இந்த பிரார்த்தனையை ரசிகர்கள் நிறைவேற்றியுள்ளனர்.

அதுமட்டுமல்ல, தளபதியின் படம் வெளியாவதை முன்னிட்டு, ஆங்காங்கே பேனர், கட்-அவுட் வைப்பதற்கு பதிலாக அந்த பொருட் செலவில் திருநெல்வேலியில் 12 இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி தங்களது சமூக அக்கறையையும் வெளிப்படுத்தியுள்ளனர். இது பொதுமக்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

சிசிடிவி கேமரா பாதுகாப்புச் சேவையை காவல்துறை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சரவணன் தொடங்கி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com