சென்னை: இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி மற்றும் நான்குநேரி தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனார்.
இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டாலினின் குற்றச்சாட்டுகள் எல்லாம் தவிடுபொடியாகிவிட்டது. இந்த இடைத்தேர்தல் வெற்றி மூலமாக அதர்மத்தை தோற்கடித்து தர்மம் வென்றுள்ளது.
இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்த இடைத்தேர்தல் வெற்றியைப் பார்க்கும் போது 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும் என்று நன்றாகவே தெரிகிறது. இடைத்தேர்தல் வெற்றியுடன் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்போம் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.